லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பண மோசடியில் சிக்கிய இலங்கை பணியாளர்கள் பலமுறை தூதரகத்திடம் விசாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.